யாழில் ஆவா குழுவினரின் அட்டகாச செயற்பாடுகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்படுள்ளதுடன், மூன்று வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.