18 – 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி

18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் குறித்து அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணி நிறைவடைந்திருப்பதாக தெரிவித்த அவர். இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பெருந்தொகை தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *