பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன்,பருத்தித்துறை கிளையின் மாற்று நடவடிக்கை வரை மூடுமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டது.