8 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது – லாவ் அகர்வால்

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுகாதாரத்துறை அமைச்சக மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உலகம் முழுவதும் இதுவரை 115 பேர் ஒமிக்ரோன் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் ஒருவர் இந்தியர் எனவும் கூறியுள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவாகவே இருப்பதாக கூறிய அவர், ஐரோப்பாவில் மொத்தம் 8 நாடுகளில் கடந்த 2 வாரங்களில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *