கிணற்றில் இருந்து வவுனியாவில் யுவதியின் சடலம் மீட்பு

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் காணப்படும் கிணறு ஒன்றுக்குள் இருந்து 19 வயது யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு தனது வீட்டில் உறங்கிய யுவதி, இன்று காலை முதல் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் யுவதி சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *