வைத்தியர்கள் போர்க்களம் சென்று யுத்தத்தில் ஈடுபட முடியாது. அதேபோன்று யுத்தத்துக்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஐக்கிய தேசியகட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதையே ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியது என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
மேலும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (11) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ,
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, தாம் அரசாங்கம் கூறுவதையே செய்கின்றோம் என்று கூறியுள்ளார். அரசாங்கம் என்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ச கூறுவதை செய்கிறார்களா ? அல்லது சுகாதார அமைச்சர் கூறுவதை செய்கிறார்களா? கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறுவதைக் கூட அரசாங்கம் செவிமடுப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறிய விடயத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கும் இதே விடயத்தையே ஆரம்பத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியது.
மேலும் எவ்வாறு வைத்தியர்கள் போர்க்களத்துக்கு சென்று யுத்தம் புரிய முடியாதோ , அதே போன்று யுத்தத்துக்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினரால் மருத்துவத்துறையுடன் தொடர்புடைய கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.