கொரோனாவுக்கு பின் மனச்சோர்வு, பதற்றதால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலையடுத்து, மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் விசேட மனநல வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.

மனச்சோர்வு அதிகரிப்பதை பெரும்பாலான மக்கள் அறிந்துகொள்வதில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் மனநல உதவி சேவைகள் அவசர அழைப்பு பிரிவுக்கு 26,889 அழைப்புகள் கிடைத்தன.

2020ஆம் ஆண்டில் இந்தப் பிரிவுக்கு 28,508 அழைப்புகள் வந்தன.

தினசரி வாழ்க்கை முறை மாற்றத்தால் மனச்சோர்வுகளால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இந்த மனச்சோர்வு மற்றும் மனநல பாதிப்புகளுக்கு வீட்டுவன்முறையே பிரதான காரணியாக அமைந்துள்ளது. இது தற்கொலைக்கு தூண்டும் விடயமாகும்.

முழு முடக்கம் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய நிலையில், குடும்பங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் அமைதியற்றச் சூழலுக்கு வழிவகுத்தன.

வேலை இழப்புகள், தொழில் முறிவுகள், வீட்டில் அதிக வேலைப்பளு, மனக்கசப்பு மேலும் தடையற்ற இணைய அணுகல் ஆகியவை இந்த மன அழுத்தத்துக்கு முக்கிய காரணிகளாகும்.

மனநல உதவி சேவையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த சில அழைப்புகளில், குழந்தைகளும் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகியிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *