
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு நியாயமான அளவில் அதிகரிக்கும் வரை, உலகளாவிய கடன் மதிப்பீடுகள் மேம்படும் என இலங்கை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரக்கூடியவர்களை வலுவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
5,000 ரூபா கொடுப்பனவு, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்காது, மேலும் இது இலங்கையின் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்த உதவாது.
கடன் தரமதிப்பீடுகளை குறைப்பதன் மூலம் இலங்கை அதிக கடன்களை பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும், கடன் தரமதிப்பீடுகளை குறைப்பதனால் இலங்கை அதிக கடன்களைப் பெறுவது கடினமாக இருக்கும்.
எனவே, கடனில் வாழும் காலம் முடிந்துவிட்டதை பொதுமக்கள் இப்போது கவனத்திற்கொள்ள வேண்டும்.
தேயிலை தொழிலில் உள்ளவர்கள் உட்பட உள்ளுர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நேரம் பொருத்தமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.