வடக்குக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உதயன் பணிமனைக்கு நேற்று மதியம் வருகை தந்தார். அவருடன் அவரது பாரியார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஆகியோரும் வருகை தந்தனர்.
அவர்களை உதயன் குழுமத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் மற்றும் அவரது பாரியார் திருமதி யசோதை சரவணபவன் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.
உதயன் பத்திரிகைக்கு கிடைத்த விருதுகள், உதயன் பத்திரிகை மீது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் சமகால நிலைமை தொடர்பில், உதயன் ஆசிரியர் பீடத்தினருடனும் அவர் கலந்துரையாடினார்.