தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடிவு ஏற்புடையதல்ல! திஸ்ஸ விதாரண

உள்ளாட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடியாவது ஏற்புடையதல்ல என அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி கட்சியின் பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண,

உரிய காலப்பகுதிக்குள், உரிய வகையில் தேர்தலை நடத்துவதே சிறந்த ஜனநாயக பண்பாகும். அந்த வகையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை ஏற்கமுடியாது.

எனினும், விசேட காரணமொன்றுக்காக, அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன், குறுகிய காலப்பகுதிக்கு அதனை செய்யலாம்.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கான தேவை எழவில்லை. அந்தவகையில் பதவி காலம் நீடிப்பானது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. தேர்தல் நடத்தப்பட வேண்டும். – என்றார்.

கிளிநொச்சியில் வாள்களுடன் இருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *