நாட்டில் இரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகளை உடையவர்களுக்கு, விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதற்கு முன்னரும் விவசாயிகளுக்குத் துப்பாக்கி வழங்குவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நடைமுறைகள் அமுல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

