லிட்ரோ நிறுவன தலைவர் பதவியில் மாற்றம் இல்லையா? சற்றுமுன் தகவல்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்ட தெசார ஜயசிங்க, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) முற்பகல் முத்துராஜவெல மாபிம லிட்ரோ வளாகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டபோது லிட்ரோ தலைவர் தெசார ஜயசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இதன்போது, குறித்த பதவிநீக்கம் குறித்து தனக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெசார ஜயசிங்கவை மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் , புதிய தலைவர் நியமனத்தை இரத்துச் செய்வதற்கான கடிதம் நிதியமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *