
புலம்பெயர் தேசத்தின் நிதி உதவி ஊடாக , மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையத்தின் ஏற்பாட்டில் யாழில் 50 பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அளவெட்டி , சக்தி. சிவசிறி தவசுத சிவாச்சாரியார் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில்,
பிரதம விருந்தினர்களாக , சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள் மற்றும் அருட்தந்தை பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் நிகழ்வில் பயனாளி ஒருவர் ,தமிழர்களின் வீர விளையாட்டான தீப்பந்தம் சுற்றுதல் மற்றும் கம்பு சுத்துதல் ஆகியவற்றை விளையாடி காட்டியுள்ளார்.

