
ராஜபக்ஷ அரசாங்கம் எதற்கும் பயப்படாமல் அனைத்து தவறுகளையும் மேற்கொள்ளும் அரசாங்கமாகவே காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தேர்தல் பற்றிய கருத்துகள் தற்போது பேசப்பட்டு வருகிறது.
ஒழுங்கான தேர்தல் முறையில் ஐக்கிய தேசியக் கட்சி 2015ம் ஆண்டு வந்தனர் என்றால் இன்று வரை வாக்குகளை அவர்கள் வசம் வைத்துக் கொள்ள அவர்கள் செயற்பட வேண்டும்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி ஆகும்.அன்று சஜித் பிரமதாச 40 வாக்குகளை வைத்து கொண்டு அவர்கள் ஆட்சியை கேட்ட போது ,உங்களுக்கு மூளை உள்ளதா என்று கேட்டார்கள் .
ஆனால் இன்று அநுர 3 வாக்குகளை வைத்து கொண்டு அவர்கள் கூறுவது தமக்கு ஆட்சியை தரும்படி.
நாம் இவ்வளவு எண்ணெய் கிடங்குகள் வழங்கினோம் இவ்வளவு செய்தோம் என்று கூறினாலும் இவ் பிரச்சனைகள் தீராது. அதே போன்று இவ் ஆட்சி பிழை என்று கோஷமிட்டாலும் அரசாங்கத்திற்கு அது ஒரு கருத்தாக அமையாது.
ராஜபக்ஷ அரசாங்கம் எதற்கும் பயப்படாமல் அனைத்து தவறுகளையும் மேற்கொள்ளும் அரசாங்கமாகவே காணப்படுகிறது.
ஆகவே இந் நேரத்தில் நமக்கு தேவைப்படுவது நாட்டை கட்டி எழுப்ப கூடிய ஆட்சி மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.