
புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திளெரபதியம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவம் கடந்த 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
உற்சவங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இடம் பெற்று வந்த நிலையில் இன்று (13) வசந்த மண்டப பூஜை இடம்பெற்று உற்சவ மூர்த்திகள் உள்வீதி வலம் வந்து அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அமர்த்தப்பட்டு இரதம் வெளி வீதி வலம் வந்தது.
இதன் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுதத்ல் காரணமாக கடந்து இரண்டு வருடங்கள் இடம் பெறாத பிரமோற்சவம் இம்முறை இடம் பெற்றதுடன் நாளை நடை பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் பிரமோற்சம் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

