
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஒரு முன்னுரிமைப் பட்டியல் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாகவும், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டின் எதிர்காலம் கல்வியில் தங்கியிருப்பதால் கல்வியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு அவசியமானது
குறைந்தளவிலான வசதிகளுடன் கல்வி கற்கும் பல பிள்ளைகள் இருப்பதாகவும், இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஒரு முன்னுரிமைப் பட்டியல் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாகவும், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் சிறந்த வசதிகளுடன் மாணவர்கள் கல்வி கற்கும் சகாப்தத்தை உறுதி செய்யும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.