3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடத்த முயற்சி

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கூராய் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த 131 கிலோ 725 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா, கொண்டு செல்ல பயன்படுத்திய கூலர் வாகனம் மற்றும் 2 சந்தேக நபர்களையும் கைது செய்து உள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்பிட்டி பகுதியை சேர்ந்தவர்களாவர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் கைப்பற்றபட்ட கேரள கஞ்சா மூன்று கோடியே ஐம்பது லட்சத்துக்கு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *