18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இம்மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி

இம்மாத இறுதியில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாக இருக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் ´முதலாவது டோஸ்´ ஏற்றும் பணி நிறைவடைந்திருப்பதாக தெரிவித்த அவர். இவர்களுக்கு ´இரண்டாவது தடுப்பூசி´ ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பெருந்தொகை தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவுள்ளது என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன கூறினார்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *