
இறைவனை நோக்கி உங்கள் உள்ளங்கள் என்றும் நன்றியால் பொங்கட்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது தைப்பொங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
யாழ்.மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இலங்கையிலும் புலம்பெயர்ந்து உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தமக்குரிய தனித்துவமான நன்றியின் பெருவிழாவான பொங்கல் பெருவிழாவைக் கொண்டாடும் வேளை பொங்குக நன்றியால் பொங்குக, இறை அளித்த தரையை எண்ணி தரை அளித்த விளைவை எண்ணி பொங்குக, நன்றியால் பொங்குக என்ற கிறிஸ்தவப்பாடல் மூலம் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
தொழுநோய் நீங்கிய பத்துப் பேரில் ஒருவர் மட்டும் இயேசுவிடம் வந்து அவருடைய காலில் முகம் குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார்.
இயேசு அவரைப் பார்த்து பத்துப் பேரின் நோயும் நீங்கவில்லையா மற்ற ஒன்பது பேரும் எங்கே என்று கேட்டு நன்றி கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
நன்றி கூறும் நல்ல பண்பு அனைத்து மனிதருக்கும் இருக்க வேண்டிய மிகவும் தேவையான ஒன்று. ஆனால் அனேகமான வேளைகளில் நாம் நன்றி கூறவும் நன்றியாக இருக்கவும் மறந்து விடுகிறோம்.
இது அவர்கள் பணி – இது அவர்கள் கடமை – அவர்கள் செய்யவே வேண்டும் என்றே எண்ணுகிறோம்.
முதலில் நம்மைப் படைத்த இறைவன் எமக்கு அன்றாடம் பொழியும் வரங்களுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
அவர் என்றும் எம்மைப் பாதுகாப்பார் எனற நம்பிக்கையுடன் அவருக்கு என்றும் நன்றியின் புகழ் பாடுவோம்.
அடுத்து நம்மோடு வாழும் மனிதர்கள் மட்டில் நன்றியாக இருப்போம். அன்புடைய பெற்றோர் அறிவூட்டும் ஆசிரியாகள் வழிகாட்டும் குருக்கள் துணை புரியும் உபகாரிகள் என அனைவர் மேலும் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
இயற்கையுடனும் நன்றியாக இருப்போம். மண்ணை நேசிப்போம். மரங்களை வளர்ப்போம். இறைவனை நோக்கி உங்கள் உள்ளங்கள் என்றும் நன்றியால் பொங்கட்டும் என இறையாசீர் மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
தமிழர் தாயக நிலத்தில் தமிழராட்சி தழைத்திட நாமெல்லாம் ஒன்றுபடுவோம்! மாவையின் பொங்கல் வாழ்த்து