
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அறப்பணி மையத்தால் தமிழர் தினமான தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தன் நாவிதன்வெளி அன்னமலை.3 கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பங்களுக்கு பொங்கல் பானை அகப்பை பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டதோடு பூஜை நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
கல்முனை நாவிதன்வெளி பிரிதேச பொறுப்பாளர் கே. வி ரூபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இந்த நிகழ்வில் அறப்பணி மைய உறுப்பினர்களும் . கிராமசேவகர். ஆலய குருக்கள் ஆலய நிர்வாகசபையினர். கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள். கிராமவாழ் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.