இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்..!

இராணுவத்தளபதி மக்களிடத்தே சில கோரிக்கையை விட்டுள்ளார்.அதாவது நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்றும் இராணுவத் தளபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நேரத்தில் நாட்டில் ஊரடங்கு விதிப்பது பற்றி நாம் பேசக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகுமென்றும் இராணுவத் தளபதி கூறினார்.

நாட்டை மூட வேண்டாமென்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

எனினும் மக்கள் சுகாதாரச் சட்டங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *