கொரோனா தொற்று குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு!

கொரோனாத் தொற்றுக்குள்ளான 771 பேரின் மரபணு மாதிரி பரிசோதனைக்குட்படுத்திய போது அதில் 16 பேருக்கு இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளதென விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா குணமடைந்த பின் அவர்கள் அனைவரும் இன்புளுவென்ஸா ‘ஏ’ வைரஸால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் அச்சமடையும் நிலைமை இல்லை.

எனினும், கொரோனா வைரஸ் மற்றும் இன்புளுவென்ஸா வைரஸ் ஒன்றாக தொற்றிய ஒருவரும் இதுவரையில் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த வருடம் மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியினுள் இன்புளுவென்ஸா நோயாளிகள் பாரியளவு அதிகரித்துள்ளனர்.- எனத் தெரிவித்துள்ளார்.

24 மணித்தியாலமும் மின்சாரம் தடைப்படலாம்! கை விரித்தது மின்சார சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *