பதவியிலிருந்து பி.பி.ஜயசுந்தர இராஜிநாமா!

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதன்போது, அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்! கர்தினால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *