இலங்கைக்கு இது மிகவும் சவாலான வருடம்! ஐ.நா. எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பல சவால்களை இந்த வருடம் எதிர்கொள்ளும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

இலங்கை உணவுப்பற்றாக்குறை அந்நிய செலாவணி நெருக்கடி கடன் ஆபத்துக்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் என ஐ.நாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

2022 உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களிற்கான திணைக்களத்தின் இந்த அறிக்கையில் ஒன்றுடன் ஒன்று கலந்த பல பிரச்சினைகள் உலகின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை குறைக்கின்றன.

2022 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 ஆக காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய சவால்களாக உணவு தட்டுப்பாடு வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல் மற்றும் கடன் ஆகியன காணப்படும்.

இலங்கை பாக்கிஸ்தானின் மத்திய வங்கிகள் அதிகரித்து வரும் பணவீக்கம் விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறைகளிற்கு மத்தியில் வட்டிவீதத்தை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மீள் எழுச்சி மற்றும் விலை ஸ்திரதன்மையை பேணுவதற்காக கொள்கை மாற்றங்களின் தருணங்கள் மற்றும் அளவுகள் குறித்து மதிப்பீடு செய்யவேண்டும்.

தென்னாசிய பாரிய பின்னடைவு ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *