உழவியந்திரச் சில்லுக்குள் சிக்கி யாழில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் தோட்ட நிலத்தை உழுதும்போது இடம்பெற்றுள்ளது.

புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என்பவரே இவ்வாநு உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *