ஈஸ்டர் தாக்குதலிற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் – கொழும்பு பேராயர்!

ஈஸ்டர் தாக்குதல் அடிப்படைவாதிகளின் செயற்பாடு என ஏற்கனவே அறிந்திருந்தும் அதற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (வெள்ளிக்கிழமை) ஆயிரம் நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.

இதனை முன்னிட்டு விசேட ஆராதனைகள் இன்றைய தினம் இடம்பெற்றன.

இதற்கமைய ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்றைய தினம் ராகம பெசிலிக்கா பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த ஆராதனைகளில் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த ஆராதனையில் பங்கேற்று உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *