வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் அச்சுறுத்தல் நிலையே உள்ளது! விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவைப் போன்று இலங்கையும் மீண்டும் கொரோனாப் பரவல் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் நிலைமையிலேயே உள்ளது என விசேட வைத்திய நிபுணர் தீபா கமகே எச்சரித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமலிருப்பதற்கு கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

ஒமிக்ரான் தொற்றினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவே 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் விரைவாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.

இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு சகலரும் விரைந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லை எனில் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வது கடினமாகும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *