
2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபா பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், அச்சிடப்படும் பணத்தின் அளவை இலங்கை மத்திய வங்கி குறைத்து தற்போது வருவதாகவும் ஒப்புக்கொண்டார்.
பணம் அச்சடிக்கும் நடைமுறை புதிய நிகழ்வு அல்ல எனவும் அவா் குறிப்பிட்டார்.