பொதுப்…

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக சாடியுள்ளார்.

பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த சம்பவம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என குற்றம் சாட்டிய அவர், பொலிஸார் தாங்களுக்கு ஏற்ற வாக்கு மூலத்தையே பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இது திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது அமைச்சரின் எதிர்வினையின் ஊடாக தெளிவாக தெரிகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் நேர்மையானவர் என்றால் தாம் முன்வைத்த சாட்சிகள் குறித்து விசாரணை செய்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது எனவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமொன்றை நிரூபிப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *