தைப்பொங்கல் தினத்தன்று அடிபாடு; 12 ஆண்கள் 03 பெண்கள் வைத்தியசாலையில்..!

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற அடிபாட்டு சம்பவங்களில் 12 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்கம் இரவ 12.00 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த அடிபாட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 15 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் வவுனியா பூந்தோட்டம், புளியங்குளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பான விசாரணையினை வவுனியா, ஈச்சங்குளம், புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *