கட்சிக்குள் நெருக்கடி இல்லை, மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக இடம்பெறுகின்றன – மஹிந்த அமரவீர

சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லையெனவும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மத்திய குழு, அமைப்பாளர்கள் மற்றும் கிராம உறுப்பினர்கள் அனைவரும் இதே கருத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் இதற்காக கட்சியின் தலைவர்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

சிலர் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், இருப்பினும் சுதந்திரக் கட்சி அது பற்றி பொருட்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல அரசியல் தலைவர்களுக்கு கிராமங்களுக்கு செல்வதில் பல பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, சுதந்திர கட்சிக்கு அவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை என்றும் பெருமிதம் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *