
நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் இழுவைமடியில் பிடிக்கப்பட்ட மீன்களே இவையென்றும், இலங்கை கடற்படையை கண்டதும், பிடிக்கப்பட்ட மீன்களை கைவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் நெடுந்தீவு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.