விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாட்காளி கையளிப்பு

இன,மத,பிரதேச வேறுபாடுகளை கடந்து நாடுபூராகவும் பல்வேறுபட்ட சேவைகளைச் செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அல்ஹிக்மா பௌண்டேசனினால் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாட்காளியை வழங்கி வைத்துள்ளது.

மூதூரில் விசேட தேவையுடைய 11 நபர்களுக்கு குறித்த நிறுவனத்தினால் மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) சக்கர நாற்காழிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அந்நிறுவனத்தின் உயரதிகாரி எம். நிஸ்புல்லாஹ் , மூதூர் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பீ.எம்.அறபாத் , மூதூர் பிரதேசத்தின் பல சமூக அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *