
உண்மையை மறைப்பதற்காக பொரளை தேவாலய சம்பவத்துடன் தொடர்பில்லாத ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ராகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் புதைந்து கிடக்கும் அனைத்துக் குற்றங்களின் பின்னணியிலும் கண்ணுக்குத் தெரியாத அரசியல் கரமும் பாதுகாப்பும் இருப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழலில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.