மயிலிட்டியில் விமான நிலையத்திற்காக தார்பாதை! அம்பலமான இரகசிய முயற்சி

வலி். வடக்கு கட்டுவன் மயிலிட்டி வீதியில் விமான நிலையத்திற்கான பாதை ஏற்படுத்தும் நோக்கில் தார்ப்படுக்கை வீதி அமைக்க இரகசிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

400 மீற்றர் நீளத்திற்கு 35 அடி அகலம் கொண்ட தனியார் நிலத்தை வீதியுடன் சேர்த்து பாதுகாப்பு வேலி அமைத்துள்ள படையினர் அந்த அளவு தூரத்தை விடுவிக்க கடந்த 5 ஆண்டுகளாக மறுத்து வந்தனர்.

இதனால் வீதி அமைப்பு இடை நடுவில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்றைய தினம் விமானப்படையினரோடு வந்த அதிகாரிகள் ட்ரோன் மூலம் படம் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இன்று 7 இற்கும் மேற்பட்ட வாகனங்களில் படையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் ஒப்பந்தகாரர் ஆகியோர் சற்று முன் அப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு அமைய, பழைய வீதியை புனரமைக்காது படையினர் அமைத்துள்ள வீதியோரம் அதாவது தனியார் காணியின் ஊடாகவே பாதை அமைக்க இரகசிய முயற்சிகள் தற்போது இடம்பெறுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *