அமைச்சரவை மறுசீரமைப்பில் ஏற்பட்ட தலைவலி- ராஜபக்ஷவினருக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

சிறிலங்கா அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளப்பபோவதில்லை என அரச தலைவர் கோட்டாபய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சவினர் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதிய வருடத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அமைச்சரவை மறுசீரமைப்பை கைவிட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மட்டுமல்லாது இராஜாங்க அமைச்சர்களும் தமது உயர் அமைச்சு பதவிகளை வழங்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்ததே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமைச்சர்கள் மூன்றாவது தரப்பின் ஊடாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது தலைவலியாக அதிகரித்ததால், ராஜபக்சவினர் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன் அதன் போதே அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், நிறுவனங்கள் தொடர்பாக மாத்திரம் மாற்றங்களை செய்ய கோட்டாபய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *