அதிக கடன் வசதிகளை அள்ளிவழங்க தயாரான இந்தியா!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்கும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கும் இடையில் இணைய வழி சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவினால் அண்மையில் வழங்கப்பட்ட 900 மில்லியன் டொலர் அந்நிய செலாவணிக்கான நிவாரணம் குறித்தும், கடனுதவித் திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதுடன், எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 500 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிதித் தொகையை விரைவில் வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என இந்திய வெளிவிகார அமைச்சர் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.

எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வரவேற்றுள்ளார்.

இதேவேளை, இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க இந்த சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கப்பல் விபத்து; இலங்கைக்கு 2.15 மில்லியன் டொலர் இழப்பீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *