மூதூர் மீன் சந்தை சுற்றிவளைப்பு; மீன் வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

மூதூர் மீன் சந்தையில் பழைய மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மூதூர் சுகாதார பணிமனைக்கு கிடைப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மூதூர் சந்தை தொகுதியின் மீன் கடைகள் அனைத்தும் இன்று சனிக்கிழமை திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன .

இதன்போது நுகர்வுக்கு பொறுத்தமற்ற மீன்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தான செயற்பாடுகள் இனிமேல் நடக்குமாயின் பாரபட்டசமின்றி சட்டவடிக்கை எடுக்கப்படும் என குறித்த மீன் வியாபாரிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இவ் சோதனை நடவடிக்கையினை முழு சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தலைமையிலான சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எம்.றினூஸ், மூதூர் சுகாதார பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் ஈடுடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கப்பல் விபத்து; இலங்கைக்கு 2.15 மில்லியன் டொலர் இழப்பீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *