
மாத்தறை சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய மர்ம பொதி ஒன்று சுவருக்கு மேல் வீசப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் அறிவித்துள்ளது.
சிறைச்சாலைக்கு அருகிலுள்ள உணவகத்தில் இருந்து குறித்த பொதி வீசப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் அதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான்! ஜீவன் தொண்டமான்