வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக பலரிடம் மோசடி! சகோதரிகள் கைது

பல பெண்களிடம் 24 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணமோசடி செய்த சகோதரிகள் இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.

புதுப்பிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கான உரிமத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி, அதன் மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண்கள் கைதாகியுள்ளனர்.

கண்டி – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்தி அதன்மூலம் 12 பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சுற்றுலா விசா மூலம் டுபாய் நாட்டுக்கு அனுப்பியமை, மற்றும் அவுஸ்திரேலியாவில் வேலைவாய்பை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணொருவரிடம் 6 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டமை தொடர்பில் குறித்த பெண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதான பெண்கள் இருவரும் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்களால் மோசடி செய்யப்பட்ட 615 000 ரூபாவை மீள ஒப்படைக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கைதான பெண்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தர்மபுர பொலிஸ் நிலை பொறுப்பதிகாரியாக DM.A சதுரங்க கடமைகளை பொறுப்பேற்றார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *