
வவுனியாவில் உயர்தரவகுப்பில் கற்கும் மாணவி ஒருவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்துவரும் 18 வயதுடைய மாணவியே காணாமற்போயுள்ளார். அவர், தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். விசாரணை தொடர்கின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

