
இலங்கையில் ஒமிக்ரான் தொற்றின் விகிதம் அதிகரித்துள்ளமையை காணமுடிவதாக சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கிடைத்த தகவல்களின்படி கண்டறியப்பட்ட கொரோனாவை வரிசைப்படுத்தும்போது 100க்கு 80 வீதமான தொற்றுக்கள் ஒமிக்ரான் தொற்றுக்களாக கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்களில் 180 தொற்றுக்கள் வரிசைப்படுத்தப்பட்டபோது அதில் 160 தொற்றுக்கள் ஒமிக்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, இதனைக்கொண்டு ஒமிக்ரானின் பரவல் 100க்கு 80வீதம் என்று கூறலாம்.
பண்டிகை காலத்தின் பின்னர், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி கொரோனா தொற்றுக்கள் ஒரேயடியாக அதிகரிக்குமானால் அது கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு சென்று விடும்.
சுகாhர வழிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதே கொரோனா பரவலை தடுக்கக்கூடிய ஒரு வழியாகும்.
இதேவேளை, ஒமிக்ரான் உட்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், செலுத்தப்பட்டு வரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 160ஆயிரம் பேர் வரை மூன்றாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை காலத்தில் 45லட்சம் பேர் அதாவது சனத்தொகையில் 30வீதமானோர் மூன்றாம் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 52 வீதமானோர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புக்களுக்கு 18ஆம் திகதி முதல் தடை!