பெரும் அபாயமாக மாறிவரும் கொரோனா பெருந்தொற்று சூழலில் யாழ் பல்கலைக்கழக பணியாளர்களினை பெருந்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக பணியாளர்கள் பணிக்கு வருதல் தொடர்பில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரதும் கருத்துக்கள் அறியப்பட்டு அதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை, பணியாளர்கள் அனைவரும் பணியிடங்களிற்குச் செல்லாமல் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு யாழ். பல்கலை ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் யாழ். கல்கலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் அறியத்தரப்படும் எனவும் யாழ். பல்கலை ஊழியர்சங்கம் தலைவர் த.சிவரூபன் அறிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் ,
எங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை வரை நடமாடித் திரிந்த ஒரு ஊழியர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.
Advertisement
கிளிநொச்சி வளாகம், விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், துணை மருத்துவ கற்கைகள் பீடம், இந்து கற்கைகள் பீடம், இராமநாதன் மண்டப நிர்வாக தொகுதி, பராமரிப்பு கிளை, பாற்பண்ணை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையிலும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எவ்வித பொறுப்புமற்று பணிக்கு வரும் நிலையிலும், ஏற்பட்டுள்ள அபாய நிலையை கருத்தில் கொண்டு இவ் அவசர முடிவை எடுக்க நேரிடுகிறது.
இவ்விடயங்கள் தொடர்பில் எமது சங்க நிர்வானம் யாழ். பல்கலை நிர்வாகத்துடன் கலந்துரையதடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறியத்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.