
கல்முனையின் செலான் வங்கி கிளையால் முச்சக்கர வண்டிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை வழங்கி வைப்பு!
நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் காணப்படுவதால் கல்முனை செலான் வங்கி கிளையினால் கல்முனையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு கொவிட் 19 பாதுகாப்பு திரை வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு கல்முனையின் செலான் வங்கி கிளை முகாமையாளர் எஸ். உதயகுமார் தலைமையில் இடம் பெற்றது.
இதில் உதவி முகாமையாளர் C. அஜன், அடகு பிரிவு உத்தியோகத்தர் மேனின், பொது சௌக்கிய பிரிசோதகர் ஜமால்டீன், கல்முனை முற்சக்கர வண்டி சங்க தலைவர் செ. சச்சிதானந்தம் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.