பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி பாஸை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் பாரிஸில், ஈபிள் கோபுரத்திற்கு அருகிலிருந்து மிகப் பெரிய எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய ஓபனில் விளையாட தடுப்பூசி செலுத்தாமல் சென்ற நோவக் ஜோகோவிச் அவுஸ்ரேலிய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை மேற்கோளிட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *