பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி யாழ். பல்கலை ஊழியர்கள் ஒருநாள் பணி விடுப்பு

யாழ். பல்கலைக்கழக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் பணி விடுப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியே இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் நேற்று புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக்கழக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையிலும், கிளிநொச்சி வளாகம், விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், துணை மருத்துவ கற்கைகள் பீடம், இந்து கற்கைகள் பீடம், இராமநாதன் மண்டப நிர்வாக தொகுதி, பராமரிப்பு கிளை, பாற்பண்ணை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையிலும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எவ்வித பொறுப்புமற்று பணிக்கு வரும் நிலையிலும், ஏற்பட்டுள்ள அபாய நிலையை கருத்தில் கொண்டு இவ் அவசர முடிவை எடுக்க நேரிடுகிறது.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பாதிகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் சுழற்சிமுறையிலான பணி அமுல்படுத்தப்படவேண்டும் என கோரியும் இன்று பணிக்கு செல்லாமல் ஊழியர்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று காலை பல்கலைக்கழக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் மேற்குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய பின்னரே ஊழியர்கள் பணிக்கு செல்வது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *