அந்நிய செலாவணி பிரச்சினை முடிந்தவுடன் மின்விநியோக தட்டுப்பாட்டிற்கு தீர்வு! காமினி லொகுகே

நாட்டில் தற்போது உச்சம் பெற்றுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் மின்விநியோக தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

டொலர் நெருக்கடி காரணமாக சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெயை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

அதன் காரணமாக சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 ஆம் திகதி மூடப்பட்டது.

சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையினால் மின்நிலையங்களுக்கு தேவையான உராய்வு எண்ணெயை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்ட காரணத்தினால் மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையமும், நீர்மின் உற்பத்தி நிலையமும் வழமை போன்று செயற்படவுள்ளதால் எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோகத்தை தடையின்றி வழங்க முடியும்.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம்.

யாழ் பல்கலையில் இடம்பெறவுள்ள மாபெரும் பொங்கல் கலை கலாச்சார விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *