இறுதி முயற்சியான மேன்முறையீட்டிலும் தோல்வி, நாடு கடத்தப்படுகின்றார் நோவக் ஜோகோவிச்!

அவுஸ்ரேலியாவில் தங்குவதற்கான தனது இறுதி முயற்சியான மேன்முறையீட்டிலும் தோல்வியடைந்துள்ள நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படவுள்ளார்.

தடுப்பூசி போடப்படாத செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற மேமுறையீட்டு மனுமீதான விசாரணையில், 34 வயதான நோவக் ஜோகோவிச் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் வாதிட்டது.

இந்நிலையில் மெல்போர்னில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் விளையமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *