கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பொங்கல் விழா

கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக பெற்றுள்ளது.

தமிழர் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற குறித்த பொங்கல் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவ மாவட்டங்களிற்கு பொறுப்பாக உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொங்கல் தின சிறப்பு நிகழ்வுகளும் பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் நிலைய பிரிவுகளில் உள்ள மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பொங்கல் நிகழ்வானது இன, மத, சமய வேறுபாடுகளின்றி ஒற்றுமையை ஏற்படுத்தும் நல்லிணக்கத்தின் அடையாளமான பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *