வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா..!

வவுனியா நேரியகுளம்பகுதியில் கொரோனா தொற்றினால் வயதான பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மேலும் குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களிற்கு முன்பாக வீட்டில் மரணமடைந்துள்ளார்.

அத்தோடு அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

மேலும் அதன் முடிவுகளின் பிரகாரம் பெண்ணுக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவருடன் நேற்றையதினம் வவுனியாவில் இரண்டு பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மணரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *